ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் தனிநபராக அதிக ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சாதனை படைத்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
இதையும் படிக்க: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
இந்தப் போட்டியில் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் தனிநபராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பென் டக்கெட் படைத்தார். இன்றையப் போட்டியில் அவர் 143 பந்துகளில் 165 ரன்கள் எடுத்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதற்கு முன்பாக, நியூசிலாந்து வீரர் நாதன் ஆஷ்டிலே அமெரிக்காவுக்கு எதிராக 145* ரன்கள் எடுத்திருந்ததே தனிநபர் அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனையை பென் டக்கெட் இன்று முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.
History made in Lahore
Ben Duckett smashes the highest individual score across any #ChampionsTrophy edition #AUSvENG ✍️: https://t.co/1HynsLw3Fd pic.twitter.com/U4UllWuHxa
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் தனிநபராக அதிக ரன்கள் குவித்தவர்களில் டாப் 5 இடங்களில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2000 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 141* ரன்கள் எடுத்து நான்காவது இடத்தில் சௌரவ் கங்குலியும், 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 141 ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கர் 5-வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படிக்க: துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் டாப் 5 தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்
பென் டக்கெட் - 165 ரன்கள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2025
நாதன் ஆஸ்டிலே - 145* ரன்கள் - அமெரிக்காவுக்கு எதிராக, 2004
ஆண்டி ஃபிளவர் - 145 ரன்கள் - இந்தியாவுக்கு எதிராக, 2002
சௌரவ் கங்குலி - 141* ரன்கள் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2000
சச்சின் டெண்டுல்கர் - 141 ரன்கள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1998