சாம்பியன்ஸ் டிராபி: ஒரே மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு சாதகம் இல்லை- ஸ்மித்

3 hours ago
ARTICLE AD BOX

துபாய்,

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகின்றன. இதில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதியில் ஆஸ்திரலியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளதால் இறுதிப்போட்டியும் துபாயில் நடைபெற உள்ளது. முன்னதாக இந்திய அணி அங்கும் இங்கும் அலையாமல் ஒரே இடத்தில் தங்கியிருந்து ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு உள்ளூர் போன்று கூடுதல் சாதகமாக இருக்கிறது என சில முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் இல்லை என்று ஒருநாள் போட்டியில் இருந்து நேற்று திடீரென ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய அணி எங்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. எங்களை முற்றிலுமாக வெளியேற்றியது. ஒரே நகரத்தில் (துபாய்) தங்கி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானது கிடையாது. அந்த அணி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித்கூறியுள்ளார்.

Read Entire Article