ARTICLE AD BOX
நாம் வீடுகளில் செய்யும் சமையலை விட நமது வீட்டில் உள்ளவர்களுக்கு ஹோட்டலில் செய்யும் உணவு தான் மிகவும் பிடித்தமான உணவாக இருந்து வருகிறது. ஏனெனில் அங்கு சேர்க்கப்படும் வித்தியாசமான கலவைகள் உணவின் சுவையை அதிகரிக்கிறது. சில சமயங்களில் வீட்டு உணவு சலித்து போகிவிட்டால் ஹோட்டல்களை நாடுவது வழக்கமாகிவிட்டது. மேலும் வெளியூரில் சென்று வேலை பார்ப்பவர்களும் ஹோட்டலையே பிரதானமாக நம்பி வருகின்றனர். காலை, மதியம், இரவு என மூன்று வேலை உணவுகளுக்கும் ஹோட்டலையே நம்பி வாழ்ந்து வருபவர்கள் பலர் உள்ளனர். ஏனெனில் வேலைக்கு செல்வதால் அவர்களால் வீட்டில் சமைக்க முடியாது அப்படி சென்னை போன்ற பெரிய நகரங்களில் பிரபலமான ஒரு உணவகமாக சரவணபவன் இருந்து வருகிறது. சைவ உணவுகளுக்கு பெயர் போன இந்த உணவகத்தில் அனைத்து உணவுகளும் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும். இங்கு வைக்கப்படும் சாம்பாருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த அளவிற்கு சரணபவன் சாம்பார் என்றால் பலருக்கு மிகவும் பிடிக்கும். இந்த சரவணபவன் சாம்பாரை நாமே வீட்டில் எளிமையாக செய்யலாம் கொடுக்கப்பட்டுள்ளது முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கப் துவரம் பருப்பு
1 கத்திரிக்காய்
1 முருங்கைக்காய்
10 முதல் 14 சாம்பார் வெங்காயம்
1 தக்காளி
2 பச்சை மிளகாய்
சிறிய அளவிலான புளி
தேவையான அளவு உப்பு
2 டீஸ்பூன் பொட்டுக்கடலை
1 பெரிய தக்காளி -
துருவிய தேங்காய்
4 டீஸ்பூன் சாம்பார் பொடி
சிறிதளவு பெருங்காயம்
தாளிக்க:
அரை டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் சீரகம்
அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
2 வற்றல் மிளகாய்
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை
ஒரு கைப்பிடி கொத்த மல்லி இலை
மேலும் படிக்க | முருங்கைக்கீரை அடை காலை உணவுக்கு சூப்பர் சாய்ஸ்!
மேலும் படிக்க | சண்டே ஸ்பெஷல் இறால் புளிக்குழம்பு! கிராமத்து ஸ்டைல் ரெசிபி!
செய்முறை
முதலில் கத்தரிக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றை சிறு துண்டுகளாக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கவும். சாம்பார் செய்ய முதலில் துவரம் பருப்பை குக்கர் அல்லது சட்டியில் வேக வைக்கவும். வேகவைத்த பருப்புடன் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், கீறிய பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.
பின்னர் ஒரு மிக்ஸியில் பொட்டுக்கடலை, தக்காளி, சாம்பார் பொடி, துருவிய தேங்காய் மற்றும் பெருங்காயப் பொடி ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் கொதிக்கும் பருப்பில் இதனை சேர்க்க வேண்டும். இப்பொழுது அதனுடன் புளியையும் கரைத்து ஒன்றாக, கொதிக்கும் சாம்பாரில் விடவும். காய் வெந்தவுடன் உப்பு சரி பார்த்து இறக்கவும். தாளிப்பதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாநாட்டும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு பொரிந்ததும் பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி சாம்பரை அதில் ஊற்றவும். கொத்தமல்லி இலை போட்டு கொதித்ததும் இறக்கி பரிமாறவும். சுவையான சரவண பவன் சாம்பார் ரெடி!

டாபிக்ஸ்