ARTICLE AD BOX
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய! பக்தர்களுக்கு புதிய நடைமுறை அமல்!
திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில் சுவாமி தரிசனம் செய்யும் நேரத்தை விரைவுப்படுத்த தேவஸ்வம் போர்டு ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது.
சபரிமலைக்கு சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்களும் மற்ற நடை திறப்பு நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருகிறார்கள். இந்த நிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

அப்போது தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்தனர்.
இன்றைய தினம் முதல் 19-ஆம் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, சகஸ்ர பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை , புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
19ஆம் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு ஹரிவாராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இந்த நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு தரிசன நேரம் கூடுதலாக கிடைக்கவும் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஒரு முடிவு செய்துள்ளது.
அதாவது 18ஆம் படி மீது ஏறி செல்லும் பக்தர்கள் மேம்பாலம் வழியாக சுற்றி வந்து பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது, சுவாமி தரிசனம் செய்யவும் நீண்ட நேரமாகிறது, இங்கு காத்திருக்கும் நேரத்தால் சுற்றுலா வந்த பக்தர்களால் மற்ற ஊர்களை சுற்றி பார்க்க முடியாத நிலை இருக்கிறது என பக்தர்கள் கருதினர்.
இதை தேவஸ்வம் போர்ட்டிலும் அவர்கள் புகாராக பதிவு செய்தனர். இதையடுத்து சபரிமலையில் புதிய நடைமுறையை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது. அது நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதாவது 18ஆம் படி ஏறிச் செல்லும் பக்தர்கள் மேம்பாலம் வழியாக செல்லாமல் கொடி மரத்தில் இருந்து கோயில் நடை பகுதிக்கு இரு வரிசைகளாக சென்று தரிசனம் செய்தனர். இந்த புதிய நடைமுறையை பக்தர்கள் வரவேற்றனர். சுவாமியை நன்கு நிதானமாக தரிசிக்க முடிவதாகவும் கூட்ட நெரிசலையும் நேரத்தையும் கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு எடுத்துள்ள இந்த முயற்சியை பாராட்டுகிறார்கள்.
- Asthma home remedy: வெற்றிலை+ ஒரு துண்டு இஞ்சி போதும்! 48 நாளில் கரைந்தோடும் சளி! ஆஸ்துமாவுக்கு பைபை
- நகை அடகு வைக்க போறீங்களா? அப்போ இதை நோட் பண்ணுங்க.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய முடிவு
- தமிழக பட்ஜெட் ரூபாய் லோகோ மாற்றத்தால்.. புலம்பி தீர்க்கும் வட இந்திய நெட்டிசன்கள்!
- '₹' பதில் 'ரூ'.. குறியீட்டு வாதம் மட்டுமல்ல, இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்துகிறது: நிர்மலா சீதாராமன்
- தேனியில் வைகை ஆற்றுப்பாலத்தில் பைக்கை நிறுத்திய கள்ளக்காதல் ஜோடி.. இதுல ஹேப்பி டூர்.. இரவில் கொடுமை
- ரூபிணிக்கு இந்த நிலைமையா? வேலூர் பிரமுகர் யார்? திருப்பதி கோயிலில் ஸ்பெஷல் தரிசனத்துக்கு ஆசைப்பட்டு?
- மும்மொழி சர்ச்சை: ஓபன் சவால் விடுகிறேன்.. பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு பிடிஆர் சேலன்ஞ்!
- அமெரிக்காவின் ஹெல்த்கேர் சிஸ்டமே அழிய போகுது.. இந்தியாவை சீண்டி சூடு போட்டுக்கொண்ட டிரம்ப்.. தேவையா?
- இன்சல்ட் செய்தாரா நயன்தாரா? கடுப்பான மீனா போட்ட பதிவு! தொடங்கியது அடுத்த பிரச்சனை
- கைகோர்க்கும் ஆப்கானிஸ்தான்.. சீனுக்குள் வரும் சீனா.. அப்பவே சொன்ன மோடி! பலுசிஸ்தானில் நடப்பது என்ன?
- மகளிர் உரிமை தொகை.. நாளை இந்த அறிவிப்பு வந்தால்.. எல்லாமே மாறும்.. பட்ஜெட்டில் பெரிய சர்ப்ரைஸ்?
- பழைய ஓய்வூதிய திட்டம் எங்கே? பட்ஜெட்டால் கடுகடுப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அடுத்து என்ன?