ARTICLE AD BOX
எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என புராணங்களில், குறிப்பிடபட்டுள்ளது. அந்த கோயில்கள் யாவும் கும்பகோணத்தைிலும் கும்பகோணத்தை சுற்றியும் அமைந்துள்ளன. அத்தகைய கோயில்களை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து நலன்களும் கிட்டும் என்பது ஐதீகம்.
தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் கும்பகோணம் தான். இங்கு பல கோயில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம். அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர். இதனால் தான் இது கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்பதை தெரிந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும் இல்லையா?
கும்பகோணம் திருக்கோயில்கள் 'கருமுதல் சதாபிஷேகம்' வரை பலனடைய இந்த கோயில்களை மட்டும் வழிபட்டால் போதும்.
குழந்தைபாக்கியத்திற்கு - சென்னியமங்கலம். திப்பிராஜபுரம்.
கரு உருவாக (புத்திரபாக்கியம்) - கருவளர்ச்சேரி.
கருவை பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்.
நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு - வைத்தீஸ்வரன் கோயில்.
ஞானம் பெற – சுவாமிமலை.
கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு – கூத்தனூர் சரசுவதி கோயில்.
எடுத்த காரியம் வெற்றி பெற மற்றும் மனதைரியம் கிடைக்க – பட்டீஸ்வரம் துர்கை கோயில்.
உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோயில்.
செல்வம் பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோயில்.
கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்.
இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில்
பெண்கள் ருது ஆவதற்கும், பிரச்சினைகள் தீரவும் - கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் (நவ கன்னிகை).
திருமணத்தடைகள் நீங்க – திருமணஞ்சேரி கோயில்.
நல்ல கணவனை அடைய - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில்.
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ - திருச்சத்திமுற்றம் கோயில்
பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கார தேவி கோயில்
கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர் கோயில்.
பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்.
எம பயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம் கோயில்.
நீண்ட ஆயுள் பெற – திருக்கடையூர் கோயில்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்... தெரிந்தால் சொல்லுங்களேன்!