ARTICLE AD BOX
இந்தியா-இலங்கை பக்தர்களின் பாரம்பரிய உறவுத் திருவிழாவாகக் கருதப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.இருநாட்டு பக்தர்களும் ஜெபமாலையை சுமந்து வந்த சிலுவை பாதை நிகழ்ச்சியும், நற்கருணை ஆராதனையும், அந்தோணியார் தேர் பவனியும் நடைபெற்றது.இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்