ARTICLE AD BOX
கடலூர் அருகே அடுத்தடுத்து மாயமான இரு இளைஞர்கள் கொலை! விசாரணையில் திடுக்
கடலூர்: கடலூரில் அடுத்தடுத்து காணாமல் போன இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் நண்பர்களே கொன்று புதைத்தது தெரியவந்தது.
கடலூர் மாவட்டம் எம்.புதூர் மற்றும் டி.புதூர் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ், அப்புராஜ் ஆகிய 2 இளைஞர்கள் கடந்த மாத இறுதியில் காணாமல் போய்விட்டதாக அவர்களின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கடந்த 20 நாட்களாக இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சரண்ராஜ், அப்புராஜ் ஆகியோரின் நண்பர்களுக்கு இந்த இளைஞர்கள் மாயமான விவகாரத்தில் தொடர்பிருப்பது போலீஸாருக்கு நேற்று தெரியவந்தது. இதையடுத்து நண்பர்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அப்புராஜையும் சரண்ராஜையும் கொன்று புதைத்தது தெரியவந்தது. நெய்வேலி என்எல்சி அருகே பூமங்கலம் என்ற பகுதியில் இருவரும் புதைக்கப்பட்டதாக தகவல்கள் நண்பர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.
இதையடுத்து கடலூர் மாவட்டம் எஸ்பி ஜெயகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்குள்ள இருவரது உடல்களும் தோண்டியெடுக்கப்பட்டு வருகின்றன. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரு உடல்களும் தோண்டப்பட்டு அந்த பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- சொந்த குடும்பத்தையே கொன்ற கேரள இளைஞன்! பாட்டியை கூட விடல! அடுத்து போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து..பகீர்!
- பல்லடத்தில் மக்களை துரத்தி துரத்தி தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்.. மதுபோதையில் அட்டூழியம்
- போலீஸ் எங்களை மிரட்டுறாங்க..ஒருத்தனா இப்படி செய்திருக்க முடியாது! கரூர் மாணவியின் தந்தை பகீர் புகார்
- கரூரே கதிகலங்கிப் போச்சு.. மாணவியின் கழுத்தில் இறங்கிய கத்தி! என்ன நடந்தது? போலீஸ் சொன்ன விளக்கம்!
- தனியா இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞரை காலில் சுட்டு பிடித்த போலீஸ்! மற்றொருவருக்கு மாவுக்கட்டு
- சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர் செந்திலிடம் ரூ 15 ஆயிரம் ஆன்லைன் மோசடி! வீடியோவில் பகீர்!
- பயங்கரம்.. 10ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த மாணவன்.. நடந்தது என்ன? கரூரில் பரபரப்பு!
- வாடகைக்கு அறை எடுத்து கஞ்சா செடி வளர்த்த மாணவர்கள்.. தட்டி தூக்கிய கோவை போலீஸ்
- கோவையில் ஏசி வாங்க ஆன்லைனில் பணம் செலுத்தி மோசடி! ரூ 72 ஆயிரத்தை ஏமாற்றிய கும்பல் கைது!
- சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு.. திட்டம் போட்டு தீர்த்த 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
- பெங்களூரில் கால் டாக்சி டிரைவரை அடித்துக் கொன்ற எலக்ட்ரீஷியன்! விசாரணையில் பகீர்
- 2 ஆக உடையும் பாகிஸ்தான்? இந்தியா அருகே உருவாகும் புதிய நாடு? பார்லிமென்ட் டூ ஐநா வரை போன மேட்டர்..