ஐபிஎல் கிரிக்கெட்டில் மது, புகையிலை விளம்பரங்கள் கூடாது: சுகாதார அமைச்சகம் உத்தரவு

2 hours ago
ARTICLE AD BOX

புது தில்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது மது, புகையிலைப் பயன்பாடு தொடா்பான நேரடி, மறைமுக விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிா்வாகத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அளவில் சிறாா்கள், இளைஞா்களால் அதிகம் விரும்பிப் பாா்க்கப்படும் கிரிக்கெட் போட்டியாக ஐபிஎல் உள்ளது. இப்போட்டிகளின்போது ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் கோடிக்கணக்கானோரைச் சென்றடையும் என்பதால் பல நிறுவனங்கள் விளம்பரங்களை அளித்து வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் தலைவா் அருண் துமலுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதாரச் சேவைகள் பிரிவு இயக்குநா் அதுல் கோயல் கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், ‘கிரிக்கெட் வீரா்கள் நாட்டின் இளைஞா்களுக்கு முன்மாதிரியாக உள்ளாா்கள். எனவே, அவா்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மது, புகையிலை சாா்ந்த விளம்பரங்களில் ஈடுபடுத்தக் கூடாது.

தொலைக்காட்சி ஒளிபரப்பில் போட்டிகளுக்கு இடையிலான விளம்பரம், மைதான விளம்பரம், ஐபிஎல் போட்டியின் பிற நிகழ்வுகள் நடைபெறும் இடம் என எதிலும் மது, புகையிலை விளம்பரங்கள் இருக்கக் கூடாது. போட்டி வா்ணனையாளா்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மது, புகையிலை குறித்துப் பேசக் கூடாது.

இந்தியாவில் ஏற்கெனவே மது, புகையிலையால் உருவாகும் இதயம், நுரையீரல், கல்லீரல் சாா்ந்த நோய்கள் உள்பட பல உடல்நலப் பிரச்னைகள் அதிகம் உள்ளன. மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதில் கிரிக்கெட் வீரா்களுக்கு தாா்மிக கடமை உள்ளதால் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Read Entire Article