எல்லை நிர்ணயத்தில் தமிழ்நாடு ஒரு இடத்தைக் கூட இழக்காது: உள்துறை அமைச்சர் அமித்ஷா

4 hours ago
ARTICLE AD BOX
எல்லை நிர்ணயத்தில் தமிழ்நாடு ஒரு இடத்தைக் கூட இழக்காது

எல்லை நிர்ணயத்தில் தமிழ்நாடு ஒரு இடத்தைக் கூட இழக்காது: உள்துறை அமைச்சர் அமித் ஷா 

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2025
03:25 pm

செய்தி முன்னோட்டம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால், தமிழ்நாடு எட்டு மக்களவைத் தொகுதிகளை இழக்கும் என்ற நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிராகரித்துள்ளார்.

இந்த செயல்முறையின் சாத்தியமான தாக்கம் குறித்த கவலைகளை நிராகரித்து, தமிழ்நாடு ஒரு நாடாளுமன்ற இடத்தைக் கூட இழக்காது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

"எல்லை மறுவரையறைக்குப் பிறகும், தெற்கின் எந்த மாநிலத்தின் இடங்களும் குறைக்கப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தெளிவுபடுத்தினார்," என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் எல்லை நிர்ணயப் பணியில், மக்கள்தொகை அளவை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வது அடங்கும். இதில், தென் மாநிலங்களின் மக்களவை எம்.பி.க்களின் விகிதாச்சாரத்தில் மாற்றம் ஏற்படலாம் எனக்கூறப்படுகிறது.

முதல்வர் கருத்து 

எல்லை நிர்ணயம், மக்களவையில் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் என முதல்வர் கருத்து

எல்லை நிர்ணயத்தின் தாக்கங்கள் குறித்து விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு தனது உரிமைகளைப் பாதுகாக்க போராட வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த செயல்முறையை "தென் மாநிலங்கள் மீது தொங்கும் வாள்" என்று அவர் விவரித்தார்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மாநிலம் வெற்றி பெற்றிருந்தாலும், இது நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"நாடாளுமன்றத்தில் எங்கள் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும்... தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான விஷயம். அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி எல்லைகளைக் கடந்து பேச வேண்டும்" என்று ஸ்டாலின் கூறினார்.

பதில்

மத்திய அரசின் பதில்

முன்னதாக, எல்லை நிர்ணயம் குறித்த கருத்துக்களுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாஜக தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்தார்.

அவர் "பயத்தை பரப்புபவர்" என்றும் "கற்பனை பயங்கள் மற்றும் முட்டாள்தனமான வாதங்களை" பரப்புபவர் என்றும் குற்றம் சாட்டினார்.

எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு எல்லை நிர்ணய நடவடிக்கையும் தெற்கில் உள்ளவை உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாகவும் அண்ணாமலை மீண்டும் வலியுறுத்தினார்.

Read Entire Article