“என்னோட பேத்திய விடுடா” அலறிய முதியவர்; தாத்தா-பாட்டி கண் முன், இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..

2 hours ago
ARTICLE AD BOX

சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கபடுகின்றனர்.

இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு மட்டும் இல்லாமல், சமீப காலமாக ஆண்கள் மற்றும் மிருகங்களுக்கும் நடந்து வருகிறது. இது போன்ற கேவலமான செயல்களுக்கு மனிதர்கள் அடிமையாவதற்கு முக்கிய காரணம் ஆபாச படங்கள் தான் என்று பலர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கிராமம் ஒன்றில், 25 வயது பெண் ஒருவர் தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். மனநலம் குன்றிய இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரது தாத்தா- பாட்டி விவசாய வேலைக்காக வெளியே சென்றுள்ளனர்.

பின்னர் வழக்கம் போல், இருவரும் பிற்பகலில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, அந்த பெண்ணின் வீட்டின் அருகே வசித்து வரும் 45 வயதான பிக்சன் ராஜா என்ற நபர் அந்தப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி தாத்தா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மணப்பாறை அனைத்து மகளிர் காவல்துறையினர் ராஜாவை கைது செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பென்னிற்கு பாலியல் வன்கொடுமை செய்த ராஜாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது..

Read more: நான்கரை வயது குழந்தை மீது ஏற்பட்ட ஆசை; துக்க வீட்டில் நடந்த கொடூர சம்பவம்..

The post “என்னோட பேத்திய விடுடா” அலறிய முதியவர்; தாத்தா-பாட்டி கண் முன், இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article