ARTICLE AD BOX
குஜராத்தை சேர்ந்த சுரேஷ் ஜோகி, தேஜஸ்வினி ஆகியோர் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சுரேஷை, தேஜஸ்வினி பிரிந்தார். மேலும் இன்ஸ்டாவில் வேறு இளைஞருடன் இருக்கும் புகைப்படத்தை தேஜஸ்வினி பதிவிட்டதால் ஆத்திரமடைந்த சுரேஷ், எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என வீடியோ வெளியிட்டதோடு அவரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். சுரேஷ் உயிர்பிழைத்த நிலையில் போலீஸ் விசாரிக்கிறது.