உக்ரைன் போர் தீர்மானத்தில் ரஷ்யாவுடன் கைகோர்த்த அமெரிக்கா!

2 hours ago
ARTICLE AD BOX

நியூயார்க்: யாரும் எதிர்பார்க்காத விதமாக, ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை கண்டிக்கும் தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யாவுடன் சேர்ந்து அமெரிக்கா வாக்களித்தது என்று CNN செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்கா எதிர்த்ததன் மூலம், நீண்டகாலமாக நட்பு நாடுகளாக இருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவுடன் கைகோர்த்துள்ளது. மாஸ்கோ உக்ரைன் மீது முழு அளவில் படையெடுத்ததன் மூன்றாம் ஆண்டு நிறைவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகம் மாஸ்கோவுடன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த தீர்மானம் பொதுச் சபையில் 93 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. ரஷ்ய கூட்டமைப்பு உக்ரைன் மீது முழு அளவில் படையெடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், இது உக்ரைனுக்கு மட்டுமல்லாமல் மற்ற பிராந்தியங்களுக்கும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் பேரழிவு மற்றும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும் கவலை தெரிவிக்கிறது. மேலும், மோதலைக் குறைக்கவும், விரைவில் விரோதப் போக்கை நிறுத்தவும், உக்ரைனுக்கு எதிரான போருக்கு அமைதியான முறையில் தீர்வு காணவும் அழைப்பு விடுக்கிறது.
அமெரிக்கா ஒரு மாற்று தீர்மானத்தை கொண்டு வந்தது. அதில் ரஷ்யாவை ஆக்கிரமிப்பாளராக குறிப்பிடவில்லை அல்லது உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டை அங்கீகரிக்கவில்லை என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

இது "மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டுவரவும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நீடித்த அமைதியை ஏற்படுத்தவும் வலியுறுத்துகிறது." மேலும், "ரஷ்யா-உக்ரைன் மோதல் முழுவதும் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவிக்கிறது" மற்றும் "ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நோக்கம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதும், தகராறுகளை அமைதியான முறையில் தீர்ப்பதும் ஆகும்" என்று கூறுகிறது என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா திங்களன்று (உள்ளூர் நேரப்படி) ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதே வரைவு தீர்மானத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுச் சபையில் வாக்களிப்பதற்கு முன்பு, ஐ.நாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் டொ டோரத்தி ஷியா, "உக்ரைன் மற்றும் ரஷ்யா உட்பட அனைத்து உறுப்பு நாடுகளும்" தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "இது ஒரு எளிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை. இது கடந்த காலத்தை பார்க்காமல் எதிர்காலத்தை நோக்குகிறது. போர் முடிவுக்கு வருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தீர்மானம். அமைதிக்கான பாதை சாத்தியமாகும்," என்று அவர் கூறினார்.

"திரு. தலைவர் அவர்களே, அதனால்தான் அமெரிக்கா மற்றொரு தீர்மானத்தை முன்வைப்பதை எதிர்த்தது. மேலும், உக்ரைனின் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்க முடியாது. போரை முடிவுக்கு கொண்டுவரவும், நீடித்த அமைதியை நோக்கி பணியாற்றவும் உறுதியளிக்கும் ஒரு வலுவான அறிக்கைக்கு ஆதரவாக அதை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்," என்று டோரத்தி ஷியா கூறினார்.

ரஷ்யாவுக்கு எதிரான வார்த்தைகளை வலுப்படுத்தவும், உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவும் பல திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், அமெரிக்கா தனது சொந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் இருந்து விலகியது. இந்த தீர்மனாத்தில் இருந்து இந்தியா விலகி இருந்தது.

Read Entire Article