இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேருக்கு 18 மாதம் சிறை: 14 பேருக்கு அபராதம்

4 days ago
ARTICLE AD BOX

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, கடந்த 9ம் தேதி கடலுக்குச் சென்ற ஜான்போஸ், சுதன் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். அதிலிருந்த ஜான்போஸ், அந்தோணி, நிலாகரன், நிகிதன், சேசு பூங்காவனம், சந்தியா, கார்லோஸ், நிஷாந்த், டூவிஸ்டன், அய்யாவு, அந்தோணி டிமக், அருளானந்தம், ஜெலஸ்டின், ஆரோன் ஆகிய 14 மீனவர்களை கைது செய்தனர்.
இவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து, இலங்கை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் 12 பேருக்கு இலங்கை மதிப்பில் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், படகு உரிமையாளர் ஜான்போசுக்கு இலங்கை மதிப்பில் ரூ.1.20 கோடி அபராதம், 18 மாத சிறை தண்டனை, மற்றொரு படகின் ஓட்டுநர் ஆரோனுக்கு இலங்கை மதிப்பில் ரூ.50 ஆயிரம் அபராதம், 18 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மீனவர்கள் 14 பேரின் மொத்த அபராதம் இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம் ஆகும். இதில் 12 மீனவர்கள் அபராத தொகை கட்டிய பின் விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேருக்கு 18 மாதம் சிறை: 14 பேருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article