இனியும் திமுகவின் போலி நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டாங்க… அண்ணாமலை விமர்சனம்…!!!

3 hours ago
ARTICLE AD BOX

மும்மொழி கொள்கை விவகாரத்தில் திமுக நடத்தும் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றிவரும் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளதாக அறிந்தேன். அதில் அவர், நாம் எந்த ஒரு மொழிக்கும் எதிரி கிடையாது, யார் எந்த மொழியை கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று தெரிவித்திருந்தார். சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் இதுவரை பதிலளிக்க மறுக்கிறார்.

மும்மொழி கற்க தடையில்லை ஆனால் நீங்கள் கற்க வேண்டும் என்றால் திமுகவினர் நடத்தக்கூடிய சிபிஎஸ்சி அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உங்களுடைய குழந்தைகளை சேர்த்து விடுங்கள் என்கின்றாரா ஸ்டாலின்? உங்களுடைய போலி நாடகங்களை எல்லாம் தமிழக மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள். பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி ஏழை மக்களுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் தற்போது வெளுக்க தொடங்கி விட்டது. இனி பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்களுடைய கட்சியினருக்கு இந்தி எது ஆங்கிலம் எது என்பதை உங்களுடைய அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தம் தான்  என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Read Entire Article