ARTICLE AD BOX

பீகாரில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி போஜன திட்டம் படி, 19வது தவணையாக விவசாயிகளுக்கு நிதி விடுவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதன்படி 9.8 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 22,000 கோடி நிதி நேரடியாக அனுப்பப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து பீகாரில் மாநாட்டு ஒன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாடு முழுவதும் மக்கள் உண்ணும் காலை உணவின் ஒரு பகுதியாக மகானா உள்ளது. இது ஒரு சிறந்த உணவாகும். அதன் பலன்களை கவனத்தில் கொண்டு, ஆண்டுக்கு 300 நாட்கள் இதனை என்னுடைய உணவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள போகிறேன்.
இதனை உலக அளவில் விற்பனை செய்ய வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து பீகாரில் மகானா வாரியம் அமைப்பது குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி உலகம் முழுவதும் மகானா விற்கப்படும் என்று அவர் கூறினார். நாட்டில் பீகாரில் தான் 80% மகானா உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும் உலகளாவிய தேவையை அதனால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன், உடல் எடையை பராமரிக்கவும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் இது உதவுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுவதற்கு முன்பாக, அவருக்கு மகானா மாலை அணிவிக்கப்பட்டது.