ARTICLE AD BOX
Published : 15 Mar 2025 12:22 AM
Last Updated : 15 Mar 2025 12:22 AM
இந்தி நடிகை பாக்யஸ்ரீ விபத்தில் படுகாயம்: நெற்றியில் 13 தையல்

விளையாடும் போது விபத்தில் சிக்கிய இந்தி நடிகை பாக்யஸ்ரீ-க்கு நெற்றியில் 13 தையல் போடப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை பாக்யஸ்ரீ. இந்தியில் சல்மான் கானுடன் ‘மைனே பியார் கியா’ படத்தில் அறிமுகமான இவர், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘பயோபிக்’கான ‘தலைவி’யில் ஜெயலலிதாவின் தாயாக நடித்திருந்தார். இவர், சமீபத்தில் ‘பிக்கில் பால்’ (டென்னிஸ், பாட்மின்டன் விளையாட்டுகளின் கலவை) விளையாட்டில் பங்கேற்றார். அப்போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் அவர் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, நெற்றியில் 13 தையல் போடப்பட்டது. தற்போது உடல்நிலை சீராக இருப் பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகை பாக்யஸ்ரீ மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ஏஐ வரவால் வேலைவாய்ப்புகள் பறிபோகும்: மும்பை ஆட்டோம்பர்க் நிறுவனர் கருத்து
- டெல்லியில் 59 வயது மகனுக்கு சிறுநீரக தானம் செய்து மறுவாழ்வு அளித்த 80 வயது தாய்
- ஆயுஷ்மான் பாரத் திட்ட காப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்த பரிந்துரை
- மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டிக்கு ரூ.13 கோடி வரி கட்ட வருமான வரித் துறை நோட்டீஸ்