ARTICLE AD BOX
ஆர்யன் படம் குறித்து இயக்குனர் பிரவீன்.கே அப்டேட் கொடுத்துள்ளார்.
விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவரது நடிப்பில் தற்போது ஓர் மாம்பழ சீசனில், VV 21 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதற்கிடையில் இவர், ஆர்யன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க பிரவீன் .கே இந்த படத்தை இயக்குகிறார். ராட்சசன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இதனை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பிரவீன் கே சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஆர்யன் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “ஆர்யன் திரைப்படம் கொலையைப் பற்றிய கதை. இந்த கதை சென்னையில் 5 இரவுகளில் நடக்கும். இந்த படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். இப்படம் எதார்த்தமான திரில்லர் படமாகும்” என்று தெரிவித்துள்ளார்.