இட்லியில் ஒளிந்திருக்கும் புற்றுநோய் அபாயம்… ஜாக்கிரதை! 

4 hours ago
ARTICLE AD BOX

தென்னிந்தியர்களின் பிரதான உணவான இட்லி, காலை உணவாக மட்டுமல்லாமல், பல நேரங்களிலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. இட்லி எளிய முறையில் தயாரிக்கக்கூடியது, சுவையானது, மற்றும் ஆரோக்கியமானது என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால், கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் வெளியான ஒரு அதிர்ச்சி தகவல், இந்த எளிய உணவின் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சுகாதாரத் துறை மேற்கொண்ட ஆய்வில், மாநிலம் முழுவதும் உள்ள கடைகளில் தயாரிக்கப்படும் இட்லி மாதிரிகளில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மாதிரிகள் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் நிறைந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், பாலித்தீன் கவர்களில் இட்லிகளை வேகவைத்து தயாரித்ததுதான் என தெரியவந்துள்ளது.

பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சாலையோர கடைகள் மற்றும் சிறிய உணவகங்களில் விற்பனை செய்யப்படும் இட்லிகளில் இந்த ஆபத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அன்றாட உணவில் ஒளிந்திருக்கும் இந்த ஆபத்து, கண்ணுக்குத் தெரியாத எதிரி போல நம் உயிரோடு விளையாடுகிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் வெளியானதும், கர்நாடக அரசு உடனடியாக பாலித்தீன் கவர்களுக்கு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் அரசின் இந்த துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது.

அதே நேரம், ஒரு சில வியாபாரிகள் இந்தத் தடையை மீறி பாலித்தீன் கவர்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுவது கவலை அளிக்கிறது. மேலும் இதை தடுக்க வெறும் சட்டங்கள் மட்டும் போதாது, அதை கண்காணித்து உறுதியாக அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை.

உணவு வணிகத்தில் ஈடுபடும் அனைவரும், மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குறைந்த செலவில் பாலித்தீன் கவர்கள் கிடைக்கின்றன என்பதற்காக, மக்களின் உயிரோடு விளையாடுவது மன்னிக்க முடியாத குற்றம். மாற்று வழிகளை பின்பற்றி, பாதுகாப்பான முறையில் உணவுகளை தயாரிக்க வேண்டியது அவசியம். அரசும், வணிகர்களும் மட்டுமல்ல, பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
பழங்கள் Vs நீர்: சரியான உணவு முறைக்கு சில வழிகாட்டுதல்கள்!
Cancer Causing Idly

நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்வது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல, அது நம் ஒவ்வொருவரின் வாழ்வாதார பிரச்சனை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

Read Entire Article