ARTICLE AD BOX
சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைய, முகம் பொழிவுபெற செயற்கையான பொருட்களை வாங்கி உபயோகம் செய்வதை தவிர்த்துவிட்டு, இன்று இயற்கையாக முகப்பொழிவை அதிகரிக்கும் முறை குறித்து காணலாம்.
சருமம் பொன்னிறமாக
கடலை மாவு, பாசிப்பருப்பு, ரோஜா, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றுடன் ஆவரம்பூவினை சம அளவில் எடுத்துக்கொண்டு வசம்பு சேர்த்து அரைக்க வேண்டும். உடலுக்கு சோப் தேய்த்து குளிப்பதற்கு பதில் மேற்கூரிய கலவையை தயார் செய்து தேய்த்து குளித்து வந்தால் சருமம் பொன்னிறத்துடன் அழகாகும்.
இதையும் படிங்க: தேவையற்ற கொழுப்புகளை சீர்செய்யும் வெண்டைக்காய்.. நன்மைகள் என்னென்ன?
மேனி பொன்னிறப்படும்
சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் விரைந்து மறையும். சரும தேமல் போன்றவை சரியாகும். சரும சுருக்கங்கள் விரைவில் சரியாகும். மேனி பொன்னிறப்படும். ஆவாரம்பூவை தேநீர் போல குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
ஆவாரம் பூவோடு ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளிக்க நமைச்சல் துர்நாற்றமானது நீங்கும். ஆவார பூவை அரைத்து சாறாக்கி சுண்டக்காய்ச்சி தேங்காய் எண்ணெயோடு சேர்த்து தலையில் தேய்த்து வர வழுக்கை வராது. முடி உதிரும் பிரச்சனை நின்று, முடி வளரும்.
இதையும் படிங்க: ஆண்களை விட பெண்களுக்கே ஆயுள் காலம் அதிகம்; காரணம் என்ன? ஆய்வில் வெளிவந்த உண்மை.!