<p>தமிழ்நாட்டில் 2020ம் ஆண்டுக்குப் பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p><strong>தற்காலிக பணியாளர்கள் நியமனம் ரத்து</strong></p>
<p>பணி வரன்முறை கோரி ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் சத்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த ஒழுங்கு நடவடிக்கை குறித்து மார்ச் 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. </p>
<p> </p>
<p> </p>