ARTICLE AD BOX
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற திரைப்படக் கல்லூரி மாணவரின் நடிப்புத் திறனை கண்டறிந்த தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம், கே.பாலசந்தர் அந்த நடிகருக்கு ரஜினிகாந்த் என்று மறுபெயரிடப்பட்டு தனது படங்களில் நடிக்க வைத்தார். கிட்டத்தட்ட 50- ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தற்போது இந்திய சினிமாவின் மிகச்சிறந்த சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக மாறிவிட்டார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: When Rajinikanth shared why he wouldn’t remake Amitabh Bachchan-starrer Cheeni Kum: ‘I crave for a National award, but…’
தற்போது நடிகரு ரஜினிகாந்த், ஒரு பணக்கார மற்றும் நிறைவான பாரம்பரியத்தைக் கொண்டவராக இருந்தாலும், தனது வழிகாட்டியான கே.பாலசந்தருடனான ஒரு பழைய நேர்காணலில், தனது தொழில் வாழ்க்கையின் ஒரு அம்சத்தைப் பற்றித் மனம் திறந்து பேசினார். அதில் அதில் இன்னும் ஒரு மாற்றம் தேவை என்று உணர்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இயக்குநர்கள் சங்க கொண்டாட்ட நிகழ்வின் போது நடத்தப்பட்ட நேர்காணலில், தாதாசாகேப் பால்கே விருது பெற்ற கே. பாலசந்தர் தனது சக விருது பெற்ற ரஜினிகாந்திடம் ஒரு நடிகராக அங்கீகாரம் பெற விரும்புகிறீர்களா, குறிப்பாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற விரும்புகிறீர்களா என்று கேட்டார். இந்த கேள்விக்கு, புத்துணர்ச்சியூட்டும் வகையில் நேர்மையாக எந்த வார்த்தைகளையும் சொல்லாமல், "ஆம், தேசிய விருதுக்கான ஏக்கம் இருக்கிறது, ஆனால் அது அனைத்தும் சரியான இயக்குனர்களின் கைகளில் உள்ளது" என்று ரஜினிகாந்த் கூறினார்.
இருப்பினும், அவரது சூப்பர் ஸ்டார் பாரம்பரியம் குறித்தும், அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்த சீனி கம் போன்ற ஒரு படத்தில் நடிக்க முடியுமா என்றும் கேட்டபோது, ரஜினிகாந்த் அதை உடனடியாக நிராகரித்து, "உண்மையாகச் சொன்னால், இப்போது, என் கலைப் பக்கத்தைத் தொடும் படங்களை தேர்வு செய்வதில், என் திருப்தி இல்லை. இப்போது, என் கவனம் பெரிய வணிக முயற்சிகளில் உள்ளது. அந்த வகையான படங்களுக்காக என் இதயம் அதிகமாக துடிக்கிறது. நிச்சயமாக, சீனி கம் ஒரு வணிகப் படம், ஆனால் அது ஒரு சிறிய வணிகப் படம். அதைவிட பெரிய வணிக முயற்சிகளை உருவாக்குவதே எனது நோக்கம் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
சந்தேகத்திற்கு இடமின்றி, இந்தத் தெளிவுதான் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால நட்சத்திர வாழ்க்கையின் அடையாளமாக இருந்து வருகிறது, அதில் அவருக்கு என்ன படம், வெற்றியை கொடுத்தது, எந்த படம் வெற்றியை கொடுக்கவில்லை என்பதையும் முழுமையாக அறிந்திருந்தார். அடுத்து,முகலாய-இ-ஆசம், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளை போன்ற காலத்தின் சோதனையைத் தாங்கும் திரைப்படங்களைப் பற்றிக் கேட்டபோது, அவை வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய சினிமாவின் தங்கத் தரமாகத் தொடர்கின்றன என்று பதில், அளித்துள்ளார்.
தனது கலைப் பக்கத்தையும், வணிகப் பக்கத்தையும், ஆன்மீகப் பக்கத்தையும் திருப்திப்படுத்தும் படங்களைத் தேர்ந்தெடுத்த ரஜினிகாந்த் அதற்கு உதாரணமாக, ஸ்ரீ ராகவேந்திரா, பாஷா, எந்திரன், படங்களை குறிப்பிட்டார். ஒரு காரணத்திற்காக அனைத்து வயதினருக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்தார். அவர் வணிக சினிமாவின் தேவைகளைப் புரிந்துகொள்கிறார், பார்வையாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத் தயாரிப்பு பாணியின் பரிணாமத்திற்கு ஏற்ப, மிக முக்கியமான பிராண்ட் ரஜினிகாந்த்.