அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய எளிய பாட்டி வைத்தியம்..!! படித்ததில் பிடித்தது..!!

3 hours ago
ARTICLE AD BOX

சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு டாக்டரை

தேடிக்கொண்டு இருக்காமல் நாமே எளிய

முறையில் நோய்களை குணப்படுத்த எளிய

பாட்டி வைத்தியம்:-

 

1. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள்

கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால்

வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில்

தேய்க்கவும்.

 

2. கொழு கொழுவென குண்டாக

இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய,

கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க

வேண்டும்.

 

3. எள், எள்ளில் இருந்து வரும்

நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக்

காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை

அதிகரிக்கும்.

 

4. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில்

போட்டால் வலி குறைந்து விடும்.

 

5. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு

கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம்.

தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக்

கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட

இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை

அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும்

குடிக்கச் சுவையாக இருக்கும்.

 

6. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை

கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால்

குணமாகும்.

 

7. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில்

அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன்

குடித்துவர தலைவலி நீங்கும்.

 

8. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி

அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்,

விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து

அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல்

நீங்கும்.

 

9. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால்

வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

 

10. வெள்ளைப் பூசனிக்காயை

பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து

இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி,

கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில்

கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும்

ருசியாக இருக்கும். பூசணிக்காய்

ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

 

11. வால்மிளகின் தூளை சீசாவில்

பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை

தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

 

12. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன்

மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று

உப்புசம், அஜீரணம் மாறும்.

Read Entire Article