’அதிமுகவில் ஈகோவை உதறித்தள்ளிவிட்டு ஒன்றிணையுங்கள்!’ ஓ.பன்னீர் செல்வம் ஓபன் டாக்!

1 day ago
ARTICLE AD BOX

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்றால் பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றியணைய வேண்டும் என்பதுதான், தமிழக மக்களின் கருத்தாகவும், அதிமுக தொண்டர்கள் கருத்தாகவும் உள்ளது. அவரவர் மனதில் உள்ள ஈகோவை உதறித் தள்ளிவிட்டு நமது தலைவர்கள் காட்டிய வழியில் செல்ல வேண்டும். ஈகோ பிடித்து உள்ள தலைவர்கள் ஈகோவை விட்டுக் கொடுத்து, கழக நலன் கருதி, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கருத்தாக உள்ளது என அவர் கூறினார்.

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
Read Entire Article