‘அதிமுகவின் பிரிந்த சக்திகள் ஒன்றிணைய வேண்டும்’ - ஓபிஎஸ் விருப்பம்

21 hours ago
ARTICLE AD BOX

Published : 16 Mar 2025 04:19 PM
Last Updated : 16 Mar 2025 04:19 PM

‘அதிமுகவின் பிரிந்த சக்திகள் ஒன்றிணைய வேண்டும்’ - ஓபிஎஸ் விருப்பம்

ஓ.பன்னீர் செல்வம் | கோப்புப்படம்
<?php // } ?>

திருப்பத்தூர்: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய பிரிந்து கிடக்கும் சக்திகள் ஈகோவைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “அதிமுக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படுவதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதாவும் அந்த சட்ட விதிகளைத்தான் கடைபிடித்தார். இப்படியான வரலாற்றைக்கொண்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், இன்று பல பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கிறது.

பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைத்து கட்சி உருவாக்கப்பட்ட நோக்கத்தினை நிறைவேற்ற பாடுபாட வேண்டும். வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் அமைவதற்கு, அதிமுகவின் பிரிந்த சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.

அதிமுக தலைவர்கள் தங்களின் ஈகோவை தவிர்த்து ஒன்றிணைந்து செயல்பட்டு தலைவர்கள் காட்டிய வழியில் செல்ல வேண்டும். தலைவர்கள் கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விரும்பம்.” என்று தெரிவித்தார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article