அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது..! ஏராளமான போலீசார் குவிப்பு.. என்ன காரணம்..?

22 hours ago
ARTICLE AD BOX

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அதிமுக செயலாளர் தினேஷ்குமார். அதே பகுதியைச் சேர்ந்த வினோத், அப்பு உள்ளிட்டோர் பிப்.25ஆம் தேதியன்று இரவு பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமாரை கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதைத் தடுக்க முயற்சித்துள்ள மோகன் என்பவரையும் கடுமையாகத் தாக்கினர்.

இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் இன்று திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த போராடட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். 

இந்த நிலையில் அனுமதியை மீறி போராட்டம் நடத்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திருக்கழுக்குன்றத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300க்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

Read more:என் அப்பா மருத்துவமனையில் அனுமதியா..? பொய்யான தகவல்.. யேசுதாஸ் உடல்நலம் குறித்து மகன் விளக்கம்..!

The post அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது..! ஏராளமான போலீசார் குவிப்பு.. என்ன காரணம்..? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article