ARTICLE AD BOX
Published : 23 Feb 2025 05:09 AM
Last Updated : 23 Feb 2025 05:09 AM
அசாம் பேரவையில் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்துவதற்கான 2 மணி நேர இடைவெளி ரத்து

குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்துவதற்காக 2 மணி நேர இடைவெளி விடும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அசாம் சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏ-க்கள் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்துவதற்காக, 2 மணி நேரம் இடைவேளை விடும் நடைமுறை இருந்து வந்தது. இந்த முறை முதல்வர் சையது சாதுல்லா தலைமையிலான ஆட்சியின்போது கடந்த 1937-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
சுமார் 90 ஆண்டுகளாக தொடரும் இந்த நடைமுறையை ரத்து செய்வது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சபாநாயகர் தலைமையிலான சட்டப்பேரவை விதிகள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமையிலும் மற்ற நாட்களைப் போலவே பேரவை செயல்பட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் பிஸ்வஜித் டெய்மரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அசாம் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இந்த கூட்டத் தொடர் முதல் வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேர இடைவெளி விடும் முறை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வரவேற்றுள்ளார். அதேநேரம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஏஐயுடிஎப் எம்எல்ஏ ரிபிகுல் இஸ்லாம் கூறும்போது, “சட்டப்பேரவையில் 30 முஸ்லிம் எம்எல்ஏ-க்கள் உள்ளனர். வெள்ளிக்கிழமை இடைவேளையை ரத்து செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், அவர்கள் (பாஜக) ஒருதலைப்பட்சமாக இந்த முடிவை அமல்படுத்தி உள்ளனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- மகா கும்பமேளாவில் பங்கேற்க முடியாத பக்தர்களின் புகைப்படத்தை புனித நீராட்ட ரூ.1,100 கட்டணம்
- ஓடிடி, சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த கடுமையான சட்டங்கள்: நாடாளுமன்ற குழுவிடம் மத்திய அரசு உறுதி
- ஏர் இந்தியா விமானத்தில் உடைந்த இருக்கை: அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வேதனை
- மியான்மரில் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுவோரில் 2 ஆயிரம் பேர் இந்தியர்கள்