ARTICLE AD BOX
USAID பஞ்சாயத்து.. சர்ச்சையில் சிக்கும் இந்தியாவின் வீணா ரெட்டி! யார் இவர்? முழு விவரம்
நியூயார்க்: இந்தியாவில் தேர்தல்களில் வாக்காளர்களை அதிக அளவில் பங்கெடுக்க வைக்க அமெரிக்கா ஒதுக்கியிருந்த 2.1 கோடி டாலர் நிதி தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நிதி, பாஜக தலைமையிலான மத்திய அரசை அகற்ற பயன்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாஜக ராஜ்ய சபா எம்பியும், மூத்த வழக்கறிஞருமான மகேஷ் ஜெத்மலானி இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். குறிப்பாக 2021-2024 வரை USAID இந்தியா தலைவராக இருந்த வீணா ரெட்டிக்கு இதில் முக்கிய பங்கு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தனது x தளத்தில், "கடந்த 2021-2024 வரை USAID இந்தியா தலைவராக இருந்த வீணா ரெட்டி, கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்தியாவுக்கு வந்திருந்தார். ஆனால் தேர்தல் முடிந்த கையுடன் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அவர் இந்தியாவில் இருந்தபோது, இங்கிருந்த விசாரணை அமைப்புகள், USAID பணம் யாருக்காக பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து கேள்வியை கேட்டிருக்கலாம். மட்டுமல்லாது அவர், அமெரிக்க தூதருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்" என்று விமர்சித்திருக்கிறார்.
இவர் குற்றம்சாட்டும் வீணா ரெட்டி யார்? இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கே வசித்து வருகிறார். அமெரிக்க வெளியுறவு சேவையின் மூத்த தொழில் உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார். இந்தியாவுக்கு மட்டுமல்லாது பூட்டானிலும் USAID தலைவராக பணியாற்றியிருக்கிறார். இந்த பொறுப்புகளை வகித்த முதல் இந்திய-அமெரிக்கர் இவர்தான்.
மட்டுமல்லாது கம்போடியாவில் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி மற்றும் ஜனநாயகம் ஆகிய துறைகளில் திட்டங்களை மேற்பார்வையிடும் மிஷன் இயக்குநராகவும் இருந்திருக்கிறார். ஹைட்டியில் துணை மிஷன் இயக்குநராக இருந்த இவர், நிலநடுக்கத்திற்கு பிந்தைய மறுகட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்கியிருக்கிறார்.
கல்வியை பொறுத்த அளவில், கொலம்பியா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் ஜூரிஸ் டாக்டராகப் பட்டமும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் கலை முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். தவிர நியூயார்க், லண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் கார்ப்பரேட் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டிருக்கிறார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவியை செய்து வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 1961 ஆம் ஆண்டு அப்போதைய அதிபராக இருந்த ஜான் ஆப் கண்ணாடியால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 60களில் இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்கவில்லை. எனவே வாக்காளர்களை தேர்தலில் அதிக அளவு பங்கெடுக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு முதன் முதலில் தொடங்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு இந்த நிதி ஒதுக்கீட்ட ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். ஆட்சி மாற்றத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டி இருந்த நிலையில் காங்கிரஸ் அதனை மறுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- டெல்லியின் 9வது முதல்வராக பதவியேற்றார் பாஜக ரேகா குப்தா.. துணை முதல்வர் ஆனார் பர்வேஷ்!
- டெல்லி அரியணையில் அமரும் ரேகா குப்தா.. முதல்முறை எம்எல்ஏ டூ முதலமைச்சர்.. தேர்வானது எப்படி?
- பாஜகவுக்கு குட்பை- அதிமுகவுடன் கை கோர்க்கும் பாமக? அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் உறுதி? தேமுதிக கதி?
- பேரிடர் நிவாரணத்திலும் தமிழகத்தை புறக்கணித்த மத்திய பாஜக அரசு- 5 மாநிலங்களுக்கு மட்டும் விடுவிப்பு
- இன்னும் 10 நாட்கள்தான்.. கவுண்டவுன் தொடங்கியது.. தமிழக பாஜக தலைவர் மாற்றமா? அப்போ அண்ணாமலை?
- PM SHRI திட்டத்துக்கு முழு நிதியையும் மத்திய அரசு வழங்குகிறது- அண்ணாமலை ஆணித்தரமாக சொன்னது உண்மையா?
- சிபிஎஸ்சி பள்ளியின் நிர்வாக குழு தலைவர் திருமாவளவன்.. விஜய்யை தொடர்ந்து திருமா மீது அண்ணாமலை அட்டாக்
- என்ன பேச்சு.. திகார் சிறைக்கு அனுப்பினால் தான் வேல்முருகனுக்கு அறிவு வரும்.. பாஜக நாராயணன் ஆவேசம்!
- தலைநகரை தட்டித் தூக்கிய பாஜக.. டெல்லி முதல்வர் அரியணையில் அமர போவது யார்? சஸ்பென்ஸ்க்கு இன்று விடை!
- மத்திய அரசு வேலை என மிகப்பெரிய மோசடி .. தலைமறைவான பாஜக நிர்வாகி, மனைவியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
- குஜராத் உள்ளாட்சி தேர்தல் பாஜக பிரம்மாண்ட வெற்றி.. காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி
- புதுக்கோட்டை கொடூரம்: பள்ளி பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை! அன்பில் மகேஷை பதவி விலக சொல்லும் அண்ணாமலை!