MBA, MCA & MSc பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை…! அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு…!

3 hours ago
ARTICLE AD BOX

2025-ஆம் ஆண்டிற்கான MBA, MCA, MSc பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர டான்செட் என்ற பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். அதேபோல், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் சேர வேண்டுமானால் சீட்டா என்ற பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டு்ம். இந்த இரண்டு நுழைவுத்தேர்வுகளையும் தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

வரும் கல்வி ஆண்டு (2025-2026) மாணவர் சேர்க்கைக்கான டான்செட், சீட்டா பொது நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதன்படி, டான்செட் எம்சிஏ நுழைவுத்தேர்வு மார்ச் 22-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், அதேபோல், எம்பிஏ நுழைவுத்தேர்வு அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், சீட்டா பொது நுழைவுத்தேர்வு மார்ச் 23-ம் தேதி (ஞாயிறு) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும் நடைபெற உள்ளன. மேலும் எம்பிஏ மற்றும் எம்சிஏ நுழைவுத்தேர்வுகள் மார்ச் 29, 2025 அன்று நடைபெறவுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி உடைய பட்டதாரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.annauniv.edu) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

The post MBA, MCA & MSc பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை…! அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article