ARTICLE AD BOX
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் உத்திரகுமார். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இதனிடையே, இன்று பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது. சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வீடு வாசலில் பெண்ணுக்கு காத்திருந்த எமன்; மின்கம்பி அறுந்து தொங்கி நேர்ந்த சோகம்.! பெண் பலி.!
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உத்திரகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இராமநாதபுரம்: கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 3 பேர் பலி..!