ARTICLE AD BOX
IPL 2025: தொடக்க விழாவில் புஷ்பா நாயகி, தமன்னா பங்கேற்பு?? வெளியான முக்கிய தகவல்!!
இந்தியன் பிரிமியர் லீக் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடர் இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய தொடராகும். இந்நிலையில் இத்தொடரின் தொடக்க விழாவில் பிரபல நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொல்கத்தாவில் நடைபெறும் இந்த தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு முன்னதாக இந்த விழா இடம்பெறும். அதே போல் தொடக்க விழாவில் டைகர் ஷெராஃப், அரிஜித் சிங் மற்றும் ஷ்ரேயா கோஷல் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
follow our Instagram for the latest updates
The post IPL 2025: தொடக்க விழாவில் புஷ்பா நாயகி, தமன்னா பங்கேற்பு?? வெளியான முக்கிய தகவல்!! appeared first on EnewZ - Tamil.