ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-வங்கதேச அணிகள் இன்று மோத உள்ளன. போட்டி நடைபெறும் துபாய் பிட்ச் ரிப்போர்ட் குறித்து பார்ப்போம்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்று தொடங்கியுள்ளது. மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும். சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2வது போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் இன்று மோத இருக்கின்றன. இந்திய நேரப்படி நண்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி துபாயின் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுவதால் முதல் போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா, விராட் கோலிக்கு இது கடைசி ஐசிசி தொடராக இருக்கும் என்பதால் அவர்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வங்கதேச அணியையும் எளிதில் எடுத்துக் கொள்ள முடியாது. அந்த அணியில் போட்டியை திருப்பக் கூடிய பல வீரர்கள் உள்ளனர். இந்தியா-வங்கதேச அணிகள் இதுவரை 41 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 32 போட்டிகளிலும், வங்கதேசம் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதான பிட்ச்சை பொறுத்தவரை ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் பாஸ்டுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் போகப் போக பேட்டிங்கிற்கு சிறப்பாக மாறும். மேற்பரப்பு மெதுவாக இருந்தால், ஸ்பின்னர்கள் நடுத்தர ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தப் போட்டியில் பனி ஒரு முக்கிய காரணியாக இருக்கும். இது டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்து வீச வேண்டிய கட்டாயத்திற்கு வழிவகுக்கும்.
சாம்பியன்ஸ் டிராபி: IND vs BAN: வங்கதேசத்தை வீழ்த்த இந்தியா ரெடி! பிளேயிங் லெவன் இதோ!

ஏனெனில் இது வெளிச்சத்தின் கீழ் பேட்டிங் செய்ய உதவும். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர்களை பலவீனப்படுத்தும். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 58 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட சராசரி முதல் இன்னிங்ஸ் ரன்கள் மொத்தம் 218. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, அதே நேரத்தில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி 34 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அதிகபட்ச அணி ஸ்கோரை பதிவு செய்த இங்கிலாந்து அணி, 2015 இல் பாகிஸ்தானுக்கு எதிராக 355/5 ரன்கள் எடுத்தது. அதே நேரத்தில் நமீபியா 2023ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக 91/10 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்தது. 2018ல் இலங்கைக்கு எதிராக முஷ்பிகுர் ரஹீமின் எடுத்த 144 ரன்கள் இந்த மைதானத்தில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது.

ஷாஹித் அப்ரிடி 2009ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6/38 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். மேலும் 14 போட்டிகளில் 25 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராகவும் உள்ளார். ஸ்காட்லாந்தின் ரிச்சி பெரிங்டன் 11 போட்டிகளில் 424 ரன்கள் குவித்து இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆவார்.
முதல் போட்டியிலேயே மண்ணை கவ்விய பாகிஸ்தான்: 60 ரன் வித்தியாசத்தில் தட்டி தூக்கிய நியூசிலாந்து