Gold Rate | புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

1 day ago
ARTICLE AD BOX

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக ரூ.62,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 64 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், இன்று (மார்ச் 18) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8250-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.113-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more: இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படுமா..? மத்திய அரசு நடவடிக்கை எடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்..!!

The post Gold Rate | புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article