47 – தெரிந்து செயல்வகை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

2 hours ago
ARTICLE AD BOX

47 - தெரிந்து செயல்வகை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
        ஊதியமுஞ் சூழ்ந்து செயல்

கலைஞர் குறல் விளக்கம்  – எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

462. தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
        கரும்பொருள் யாதொன்று மில்

கலைஞர் குறல் விளக்கம்  – தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.

463. ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
        ஊக்கா ரறிவுடை யார்

கலைஞர் குறல் விளக்கம்  – பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

464. தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
        ஏதப்பா டஞ்சு பவர்

கலைஞர் குறல் விளக்கம்  – களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

465. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
        பாத்திப் படுப்பதோ ராறு

கலைஞர் குறல் விளக்கம்  – முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாம பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.

466. செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
        செய்யாமை யானுங் கெடும்

கலைஞர் குறல் விளக்கம்  – செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.

467. எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
        எண்ணுவ மென்ப திழுக்கு

கலைஞர் குறல் விளக்கம்  – நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

468. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
        போற்றினும் பொத்துப் படும்

கலைஞர் குறல் விளக்கம்  – எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய் விடும்.

469. நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
        பண்பறிந் தாற்றாக் கடை

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.

470. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
        கொள்ளாத கொள்ளா துலகு

கலைஞர் குறல் விளக்கம்  – தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.

Read Entire Article