விஜய் தலைமையில் தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா: கொள்கை தலைவர்களின் சிலைகள் இன்று திறப்பு

6 hours ago
ARTICLE AD BOX

Published : 02 Feb 2025 03:14 AM
Last Updated : 02 Feb 2025 03:14 AM

விஜய் தலைமையில் தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா: கொள்கை தலைவர்களின் சிலைகள் இன்று திறப்பு

<?php // } ?>

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதையொட்டி, தவெக கொள்கை தலைவர்களின் சிலைகளை நடிகர் விஜய் இன்று திறந்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கிய அன்றே தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தவெகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு அக்.27-ம் தேதி தவெக முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாட்டில், அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் குறித்து விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, கட்சியில் நிர்வாகிகள் நியமனம் தீவிரப்படுத்தப்பட்டது.

அந்தவகையில், கட்சியை அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், விசிக மற்றும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல்குமார் ஆகியோருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடையும் நிலையில், 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், தவெக கொள்கை தலைவர்களான வேலுநாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலை அம்மாள் ஆகியோரது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனை இன்று காலை 10 மணிக்கு விஜய் திறந்து வைத்து கட்சிக் கொடியை ஏற்றுகிறார். அதன்பிறகு நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article