ARTICLE AD BOX
Published : 19 Feb 2025 06:45 PM
Last Updated : 19 Feb 2025 06:45 PM
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி: சிவகாசி அருகே போடுரெட்டியபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிச்சன்நாயக்கன்பட்டி அருகே போடுரெட்டியபட்டியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று ‘நீராத்திலிங்கம் ஃபயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 40-க்கும் அதிகமான அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மாலை 5.30 மணி அளவில் அங்கு பட்டாசு உற்பத்தியின்போது உண்டான உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஓர் அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. விபத்துக் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்த ஆண் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். திருத்தங்கலை சேர்ந்த பால்பாண்டி (30) என்ற தொழிலாளி 20 சதவீத தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மாரனேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- “தவெக உடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைப்பது சரியாக வராது” - சீமான்
- ‘மக்கள் யாரும் சண்டையிடவில்லை’ - திருப்பரங்குன்றம் மலை வழக்குகளை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கருத்து
- உயர் நீதிமன்றத்தில் போலீஸார் 2009-ல் நடத்திய தடியடியை கண்டித்து 16-ம் ஆண்டாக போராட்டம்: வழக்கறிஞர்கள் கைது
- “எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கக் கூடிய உன்னதமானவர் செங்கோட்டையன்” - ஓபிஎஸ் புகழாரம்