ARTICLE AD BOX
Published : 10 Mar 2025 04:57 AM
Last Updated : 10 Mar 2025 04:57 AM
‘சாவா’ திரைப்படத்தால் வதந்தி பரவுகிறது: ம.பி.யில் நள்ளிரவில் ரகசிய தங்க வேட்டை

போபால்: மராட்டிய மாமன்னர் சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட்டில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ‘சாவா’ என்ற திரைப்படம் வெளியானது.
மராத்தியர்களிடம் இருந்து தங்கத்தை கொள்ளையடிக்கும் முகலாயர்கள் மத்திய பிரதேசத்தின் புர்கான்பூர் ஆசிர்கர் கோட்டை பகுதியில் அவற்றை புதைத்து வைத்திருப்பதாக திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக ஆசிர்கர் பகுதி மண்ணில் தங்க புதையல்கள் இருப்பதாக மக்களிடையே காட்டுத் தீ போன்று வதந்தி பரவி வருகிறது.
கடந்த சில வாரங்களாக நள்ளிரவு நேரத்தில் ஆசிர்கர் பகுதிக்கு ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் குவிந்து மண்ணை அரித்து தங்கம் கிடைக்கிறதா என்று தேடுகின்றனர். இதுபோல் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- கும்பமேளாவில் தாக்குதலுக்கு திட்டமிட்ட தீவிரவாதி திடுக்கிடும் வாக்குமூலம்
- இந்திய பங்குச் சந்தையில் மார்ச் முதல் வாரத்தில் ரூ.25 ஆயிரம் கோடி பங்குகளை விற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
- ஜிஎஸ்டி வரி மேலும் குறையும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
- கலிபோர்னியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்: மத்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம்