காலி பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்

4 days ago
ARTICLE AD BOX

Published : 20 Feb 2025 05:29 AM
Last Updated : 20 Feb 2025 05:29 AM

காலி பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்

<?php // } ?>

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்ட ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற வாசகத்துடன் கூடிய சிவப்பு நிறத்திலான `டி ஷர்ட்' அணிந்திருந்தனர்.

இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கையை கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 12 ஆண்டுகளுக்கு பின்பு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றும் வேலைக்கு உத்தரவாதம் இல்லை. எங்களின் கனவுகளை நிறைவேற்ற காலிப் பணியிடங்களை அதிகரித்தால்தான் முடியும்.

இது தொடர்பாக முதல்வர், துணை முதல்வர், துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து முறையிட்டுவிட்டோம். தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக எங்களை நியமிக்கலாம். நாங்கள் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை கொடுப்போம். வரவுள்ள தமிழக பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இடம்பெறச் செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article