உலக கிளைக்​கோமா வாரத்​தையொட்டி சென்​னை​யில் மார்ச் 31 வரை இலவச கண் அழுத்த பரிசோதனை

7 hours ago
ARTICLE AD BOX

Published : 10 Mar 2025 06:19 AM
Last Updated : 10 Mar 2025 06:19 AM

உலக கிளைக்​கோமா வாரத்​தையொட்டி சென்​னை​யில் மார்ச் 31 வரை இலவச கண் அழுத்த பரிசோதனை

<?php // } ?>

சென்னை: உலக கிளைக்​கோமா வாரத்தை முன்​னிட்டு சென்​னை​யில் உள்ள அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​களில் வரும் 31-ம் தேதி வரை இலவச மருத்​துவ பரிசோதனை செய்யப்​படு​கிறது. கிளைக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய் பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. உலக கிளைக்​கோமா (கண் அழுத்த நோய்) வாரம் மார்ச் 9 முதல் 15-ம் தேதி வரை கடைபிடிக்​கப்​படு​கிறது. ‘எதிர்​காலத்தை தெளி​வாக காணுங்​கள்’ என்​பதே இந்த ஆண்​டுக்​கான கருப்​பொருள்.

கண் அழுத்த நோய் பாதிப்பை ஆரம்​பத்​திலேயே கண்​டறிந்து சிகிச்சை பெற்​றால், பார்வை திறன் குறைவதை தடுக்க முடி​யும். அலட்​சி​ய​மாக இருந்​தால், நிரந்தர பார்வை இழப்பு ஏற்​படக்​கூடும் என மருத்​து​வர்​கள் எச்​சரிக்​கின்​றனர். இந்​நிலை​யில், சென்​னை​யில் உள்ள அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​களில் வரும் 31-ம் தேதி வரை இலவச கண் பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

கண்​ணுக்​குள் அழுத்த பரிசோதனை​கள், கண் நரம்பு மதிப்​பாய்​வு​கள், பார்​வைப்​புல சோதனை​கள் போன்​றவை இலவச​மாக மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. கண் அழுத்த நோய் இருப்​பவர்​களுக்கு மருந்​துகள், லேசர் சிகிச்​சை, அறுவை சிகிச்​சைகள் செய்வது குறித்து ஆலோசனை வழங்​கப்​படும். இலவச மருத்​துவ ஆலோசனை பெற விரும்​புவோர் 95949 03774 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்​ப​திவு செய்து கொள்​ளலாம் என்று டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​யின் தலைமை மருத்​துவ அதி​காரி அஸ்​வின் அகர்​வால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article