ARTICLE AD BOX
ஹோலி வன்முறை.. கலர் பூசிக்கொள்ள மறுத்ததால் 25 வயது இளைஞர் கழுத்து நெரித்து கொலை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஹோலி கலர் பொடியை பூசிக்கொள்ள மறுப்பு தெரிவித்த இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹோலி அன்று இஸ்லாமியர்கள் வெளியே வர வேண்டாம் என்று பாஜக தலைவர்கள் பேசி வரும் நிலையில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது ஹோலி பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் டௌசா மாவட்டத்தின் ரல்வாஸ் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து உள்ளுர் மக்கள் கூறியதாவது,

"ஹன்சராஜ் எனும் 25 வயது இளைஞர் ரல்வாஸ் கிராமத்தில் உள்ள நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்காக படித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கே அசோக், பப்லு, கலுராம் என 3 பேர் ஹோலி கலர் பொடியை எடுத்து வந்திருக்கின்றனர். ஹன்சராஜ் மீது பொடியை பூச முயன்றுள்ளனர். இளைஞர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேர் கொண்ட கும்பல், இளைஞரை சரமாரியாக தாக்கியிருக்கிறது. பெல்ட்டை கொண்டு அடித்திருக்கிறார்கள்.
இறுதியாக ஒருவர் இளைஞரின் கழுத்தை இறுக்கமாக பிடித்திருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் மூச்சு திணறி உயிரிழந்திருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் மொத்த கிராமத்தையும் ஆத்திரமடைய செய்திருக்கிறது. இளைஞரின் சடலத்தை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து உறவினர்களும், கிராம மக்களும் மறியல் செய்துள்ளனர். இதனால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட இளைஞர்களை கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், இளைஞரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் மறியலில் ஈடுபட்டவர்கள் கோரியிருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
ஹோலி பெயரில் நடக்கும் வன்முறைக்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம் என்று அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கெனவே ஹோலி அன்று இஸ்லாமியர்கள் வெளியே வர வேண்டாம் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியிருந்தார். பீகாரின் மதுபனி மாவட்டத்தில் உள்ள பிஸ்ஃபி சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவான ஹரிபூஷன் தாக்கூர் பச்சௌல்,
"ஒரு வருடத்தில் 52 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. அதில் ஒரு வெள்ளியில் ஹோலி வருகிறது. எனவே ஹோலி பண்டிகையை இந்துக்கள் கொண்டாட இஸ்லாமியர்கள் அனுமதிக்க வேண்டும். அவர்கள் மீது கலர் பூசப்பட்டால் கோபப்படக்கூடாது. இதுபோன்ற பிரச்சனை ஏதேனும் இருந்தால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கலாம். சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு இது அவசியம்" என்று கூறியிருந்தார்.
அதேபோல உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "ஹோலி வருடத்தில் ஒரு வெள்ளிக்கிழமையில்தான் வருகிறது. ஆனால் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் தொழுகைகள் நடக்கின்றன. ஒருவேளை ஹோலி வெள்ளிக்கிழமையில் மசூதிக்கு போக நினைத்தால் நீங்கள் நிறங்களை தவிர்க்க கூடாது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசியல் பிரமுகருக்கு நெருக்கமான தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி-போலி வருமானவரித்துறை அதிகாரி கைது!
- சென்னை ஐடி ஊழியர் மரணம்! ஒரே ஒரு சிகரெட்டால் வந்த வினை! நடந்தது என்ன?
- ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சை பாடல்.. இசைவாணிக்கு எதிராக அவதூறு பரப்பியவருக்கு ஜாமீன்
- பூட்டிய அலுவலக அறை.. திருச்சி ‛பெல்’ பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. என்ன காரணம்?
- Ranya Rao: ரன்யா ராவின் செல்போனை பார்த்து போலீஸ் ஷாக்! தங்கம் வாங்கிய நட்சத்திர ஓட்டல் ஓனர் கைது
- 2 மகன்களும் தற்கொலைக்கு சம்மதிக்காததால் அனஸ்தீசியா கொடுத்து தூக்கிலிட்ட மருத்துவர்? ஷாக் தகவல்!
- ரூ.5 கோடி கடன்.. சென்னையில் மருத்துவர் உட்பட 4 பேர் குடும்பத்துடன் தற்கொலை.. என்ன நடந்தது?
- 'தங்க கடத்தல்' தமிழ் நடிகை ரன்யா ராவ்- வளர்ப்பு தந்தை டிஜிபி கூட்டாளியா? சிக்கும் அரசியல் 'தலைகள்'!
- வெறிநாய் கடித்ததால் பயம்.. ஆஸ்பத்திரியிலேயே கழுத்தை அறுத்து தற்கொலை செய்த இளைஞர்! கோவையில் ஷாக்!
- ’தலைநகரம்’ பாணி.. காஞ்சிபுரம் வசூல்ராஜா கொடூர கொலை.. ஒரே குண்டில் கதையை முடித்தது யார்? பரபர பின்னணி
- இந்தி எதுக்கு? இங்கிலீஷ் போதுமே! கவனம் பெற்ற டைரி மில்க் சாக்லேட் விளம்பரம்!
- ஓடும் பஸ்ஸில் கொடூரம்.. மாணவனின் விரலை குறிவைத்து வெட்டிய கும்பல்! சாதிய தாக்குதல் என்கிறார் திருமா!
- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருக்கு பதில் இவர்.. அதிரடியாக மாறிய கதை! செம சர்ப்ரைஸ் இருக்கு!
- வடிவேலு கூட இனி நடிக்கவே மாட்டேன்! பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை.. அந்த படத்திற்கு பிறகு! சோனா பதில்
- முன்னூறு நோயை நொறுக்கும் முருங்கை.. ஆணின் இயற்கையான தங்க பஸ்பம் முருங்கை பிசின்.. அற்புத சத்துக்கள்