ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனையே இல்லை.. ஆர்சிபி கோப்பை வெல்ல கோலி இதை செஞ்சா போதும்.. ஏபிடி பேட்டி

17 hours ago
ARTICLE AD BOX

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணியை பெங்களூரு சந்திக்கிறது. 17 வருடங்களாக ஒரு கோப்பையை கூட வெல்லாததால் கிண்டலடிக்கப்பட்டு வரும் அந்த அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் முதல் சாம்பியன் பட்டத்தை முத்தமிடும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

அதற்கு விராட் கோலி சிறப்பாக விளையாடுவதும் அவசியமாகிறது. கடந்த வருடம் 741 ரன்கள் அடித்த அவர் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். ஆனாலும் அவர் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது ஒருபுறம் பெங்களூரு அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அதனால் விராட் கோலி விமர்சனங்களையும் சந்தித்தார்.

ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனையில்ல:

இந்நிலையில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பிரச்சினையில்லை என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். பில் சால்ட் போன்ற அடித்து நொறுக்கும் வீரர்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே ஆர்சிபி கோப்பையை வெல்ல விராட் கோலி நங்கூரமான புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“18வது நம்பர் சரியான வகையில் விளையாடுவார் என்று நம்புகிறேன். இந்த அணி அனைத்து வகைகளிலும் அசத்துவதற்கான திறமையைக் கொண்டிருப்பதாக கருதுகிறேன். ஆம் விராட் மிகவும் பொறுமையாக தனது கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார். கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக பேட்டிங் செய்ததை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது”

நங்கூரமான ஆட்டம்:

“பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். எனவே விராட் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. ஐபிஎல் மற்றும் இதர தொடர்களில் பிலிப் சால்ட் மிகவும் அட்டாக் செய்யக்கூடிய ஒரு வீரராக விளையாடி வருகிறார். அவர் விராட் கோலி மீதான அழுத்தத்தை எடுத்து விடுவார் என்று நினைக்கிறேன். அது போன்ற சூழ்நிலையில் விராட் கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்கன்னு கோலி சொல்லிட்டாரு.. அவரும் மனுஷன் தான்.. இதை செய்வாரு.. ஏபிடி ஆதரவு

“எப்போது ரிஸ்க் எடுக்க வேண்டும் எப்போது கூடாது என்பது அவருக்குத் தெரியும். இந்தத் தொடரில் அவர் பெங்களூரு அணியின் பேட்டிங் துறையின் கேப்டனாக செயல்பட்டு புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும். ஏனெனில் இம்முறை பெங்களூரு அணி நிறைய மைதானங்களுக்கு பயணித்து விளையாட உள்ளது. அங்கே பேட்டிங் ஆர்டரில் குறைந்த ரன்களுக்குள் சரிவு ஏற்படாமல் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி அதிரடியாக விளையாடும் வீரர்கள் இருப்பதால் விராட் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று கூறினார்.

The post ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனையே இல்லை.. ஆர்சிபி கோப்பை வெல்ல கோலி இதை செஞ்சா போதும்.. ஏபிடி பேட்டி appeared first on Cric Tamil.

Read Entire Article