ARTICLE AD BOX

தமிழகத்தில் மக்காச்சோளத்திற்கு ஒரு சதவீதம் சந்தை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை தற்போது அரசு ஏற்று மாநிலம் முழுவதும் மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீதம் சந்தை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்காச்சோளத்திற்கு ஒரு சதவீதம் சந்தை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த மாவட்ட விவசாயிகள் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மாநிலம் முழுவதும் சந்தை கட்டணத்தை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.