வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிற்கான நிதியைக் குறைத்தது டிரம்ப் நிர்வாகம்

17 hours ago
ARTICLE AD BOX
வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிற்கான நிதியைக் குறைத்தது டிரம்ப் நிர்வாகம்

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மற்றும் பிற ஊடக நிறுவனங்களுக்கான நிதியைக் குறைத்தது டிரம்ப் நிர்வாகம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 16, 2025
01:08 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (VOA) மற்றும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பிற சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கான பட்ஜெட்டை பெருமளவில் குறைத்துள்ளது.

கடந்த 83 ஆண்டுகளில் முதல் முறையாக VOA விற்கான நிதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸின் சமீபத்திய நிதி மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து VOA ஊழியர்களும் குறைப்பட்டுள்ளனர்.

VOA இன் இயக்குனர் மைக்கேல் அப்ரமோவிட்ஸ், கிட்டத்தட்ட 1,300 ஊழியர்களும் விடுப்பில் வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க அரசில் ஊடகத் துறையில் முதல்முறையாக இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

ஆட்குறைப்பு

ஆட்குறைப்பால் பாதிக்கப்படும் நிறுவனங்கள்

இந்த ஆட்குறைப்பு ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா, ரேடியோ ஃப்ரீ ஆசியா மற்றும் ரேடியோ மார்டி ஆகியவற்றை மேற்பார்வையிடும் அமெரிக்க ஏஜென்சி ஃபார் குளோபல் மீடியாவையும் பாதிக்கின்றன.

இவை சீனா, வட கொரியா மற்றும் கியூபா உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பத்திரிகை சுதந்திரங்களைக் கொண்ட பிராந்தியங்களுக்கு செய்திகளை வழங்கும் தளங்களும்.

கூடுதலாக, டிரம்ப் நிர்வாகம் இந்த நிறுவனங்களுக்கான மானியங்களையும் நிறுத்தியுள்ளது.

இது அமெரிக்க ஆதரவு பெற்ற ஜனநாயக சார்பு ஊடக முயற்சிகளின் எதிர்காலம் குறித்த கவலைகளை எழுப்புகிறது. எல்லைகளற்ற செய்தியாளர் குழுவான ரிப்போர்ட்டர்ஸ் இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்தது.

இது சுதந்திரமான பத்திரிகையைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் பங்கிலிருந்து விலகுவதாகவும், காங்கிரஸ் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

Read Entire Article