ARTICLE AD BOX
Published : 09 Mar 2025 09:46 PM
Last Updated : 09 Mar 2025 09:46 PM
‘வாடிவாசல்’ படத்துக்கு வெற்றிமாறனின் உழைப்பு: தாணு நெகிழ்ச்சி

‘வாடிவாசல்’ படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறனின் உழைப்பு குறித்து தயாரிப்பாளர் தாணு நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
சென்னையில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் தயாரிப்பாளர் தாணு. இவருடன் இயக்குநர் வெற்றிமாறனும் மேடையில் இருந்தார். இருவரிடமும் ‘வாடிவாசல்’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
முதலில் தயாரிப்பாளர் தாணு, “2 நாட்களுக்கு முன்பு ஜி.வி.பிரகாஷ் ஒரு ட்யூன் அனுப்பிவைத்தார். அதை இப்போது பாடினாலும் வைரலாகிவிடும். சமீபத்தில் சூர்யாவை சந்தித்து 4 மணிநேரம் பேசிவிட்டு, பின்பு இப்பாடலை உருவாக்கி இருக்கிறார் வெற்றிமாறன். அவரது உழைப்பு நெகிழ வைக்கிறது, மகிழ வைக்கிறது. திரையுலகிற்கு கிடைத்த பெரிய கற்பக விருட்சம் தம்பி வெற்றிமாறன்” என்று தெரிவித்தார்.
தாணு பேசிய வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. ஆர்.ஜே.பாலாஜி மற்றும் வெங்கி அட்லுரி படத்தினை முடித்துவிட்டு தான் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளார் சூர்யா. இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை