‘வருணன்’ படத்தில் சத்யராஜின் குரல்

6 hours ago
ARTICLE AD BOX

சென்னை: யாக்கை பிலிம்ஸ் கார்த்திக் தரன், வான் புரொடக்‌ஷன்ஸ் ஜெயவேல் முருகன் இணைந்து தயாரித்துள்ள படம், ‘வருணன்: காட் ஆஃப் வாட்டர்’. ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா நடித்துள்ளனர். எஸ்.ராம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்ய‌, போபோ சசி இசை அமைத்துள்ளார். என்.ரமண கோபிநாத், வியாமா ராம் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். படம் குறித்து இயக்குனர் ஜெயவேல் முருகன் கூறுகையில், ‘வடசென்னை​யில் கதை நடக்​கிறது. தண்ணீர் கேன் சப்ளை செய்​யும் கம்பெனி முதலாளி ராதாரவியிடம், தென்மாவட்​டத்தில் இருந்து வந்த துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் வேலை பார்க்கிறார்.

அவருக்​கும், தண்ணீர் கேன் விற்​கும் இன்னொரு கோஷ்டிக்​கும் நடக்​கும் பிரச்​னைதான் படம். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்கள் பொது​வானவை என்பதையும், தண்ணீரின் அவசி​யத்​தையும் பற்றி சொல்​லும் இப்படத்தின் கேப்ஷன், ‘நீரின்றி அமையாது உலகு’. தண்ணீர் கடவுள் பேசுவது போன்ற ‘வாய்ஸ் ஓவர்’, படத்​தின் பல்வேறு காட்சிகளில் இடம்பெறுகிறது. இதற்காக நடிகர் சத்யராஜ் சம்பளமே வாங்காமல் டப்பிங் பேசியிருக்கிறார். வரும் மார்ச் 14ம் தேதி படம் திரைக்கு வருகிறது’ என்​றார்​.

Read Entire Article