வக்பு வாரிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்: 2ம் கட்ட பட்ஜெட் தொடரில் தாக்கல்

7 hours ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பாஜ எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு 14 திருத்தங்களுடன் தனது அறிக்கையை கடந்த 13ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த எந்த திருத்தமும் ஏற்கப்படவில்லை.

இந்நிலையில், கூட்டுக்குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுடன் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் 14 திருத்தங்களுடன் கூடிய வக்பு வாரிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடக்க உள்ள 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்பு வாரிய மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட இருப்பதாக பாஜ கட்சியினர் கூறி உள்ளனர்.

The post வக்பு வாரிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்: 2ம் கட்ட பட்ஜெட் தொடரில் தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article