வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

18 hours ago
ARTICLE AD BOX
வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 27, 2025
10:14 am

செய்தி முன்னோட்டம்

வக்ஃப் வாரிய (திருத்த) மசோதாவில் 14 திருத்தங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக் குழு 23 திருத்தங்களை பரிந்துரைத்த நிலையில், அவற்றில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு திருத்தங்களை மட்டும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

சமீப காலமாக தொடர்ந்து அரசியல் சர்ச்சையின் மையமாக இருக்கும் இந்த மசோதா, மார்ச் 10 அன்று மீண்டும் அவை கூடும்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பிப்ரவரி 13 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, தங்கள் எதிர்ப்புக் குறிப்புகளின் சில பகுதிகள் இறுதி ஆவணத்தில் இருந்து விடுபட்டதாகக் கூறி எதிர்க்கட்சி எம்பிக்களின் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது.

முக்கிய திருத்தங்கள்

மத்திய அமைச்சரவை அங்கீகரித்த முக்கிய திருத்தங்கள்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோருடன் நடந்த விவாதங்களைத் தொடர்ந்து, எதிர்ப்புக் குறிப்புகள் முழுமையாக சேர்க்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த மசோதா கடுமையான விவாதங்களைத் தூண்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் போதுமான ஆலோசனை இல்லாமல் அவசரமாக ஒப்புதல் அளித்ததாக குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே, தற்போது மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய திருத்தங்களில் வக்ஃப் கவுன்சில்களில் குறைந்தது இரண்டு முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், வக்ஃப் சொத்துக்களை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து அரசு பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாற்ற வேண்டும் என்பவையும் அடங்கும்.

Read Entire Article