ARTICLE AD BOX
புதுடெல்லி: வேலைக்கு நிலம் கொடுத்தது தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பீகாரில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது, நிலம் வழங்கினால் ரயில்வே துறையில் வேலை வழங்கப்படும் எனக் கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த மோசடி வழககில் அவரது மனைவிராப்ரி தேவி ,மகள் மிசா பார்தி உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் மார்ச் 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று லாலு பிரசாத்துக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. லாலுவின் இளைய மகனும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ்வுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
The post லாலு பிரசாத்துக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் appeared first on Dinakaran.