ரூ.50 கோடிக்கு அரிய வகை நாய் வாங்கிய பெங்களூரு நபர்!

1 day ago
ARTICLE AD BOX
Published on: 
23 Mar 2025, 3:45 am

விலையுயர்ந்த நாய் இனங்களை வாங்கி வளர்த்து வருபவர்களில் பெங்களூருவைச் சேர்ந்த எஸ். சதீஷும் ஒருவர். இவர், இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரும் ஆவார். இவர், தற்போது கேடபாம்ப் ஒகாமி என்ற ’ஓநாய்’ அரிய வகை நாய் இனத்தை வாங்க 5.7 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ. 50 கோடி) செலவிட்டுள்ளார். இந்த தனித்துவமான நாய் ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் இனத்தின் கலப்பினமாகும். மேலும் இது முதல் வகை நாய் என்று நம்பப்படுகிறது. இது உலகின் மிக விலையுயர்ந்த நாய்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. 150க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாய் இனங்களை வளர்த்து வரும் சதீஷ், இந்த அரிய வகை நாயின் புதிய உரிமையாளர் என்று விற்பனை நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நாய்க்குட்டி, கடந்த பிப்ரவரியில் அவருக்கு விற்கப்பட்டது. அவர் தனது சூப்பர்-பாவ்-ஸ்டார் நாய்களை உற்சாகமான கூட்டங்களுக்குக் காட்டி பணம் சம்பாதிப்பதாக தெரியப்படுத்தினார். 30 நிமிடங்களுக்கு டாலர் 2,800 முதல் ஐந்து மணி நேரத்திற்கு டாலர் 11,700 வரை சம்பாதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சதீஷ், “இந்த நாய்க்குட்டியை வாங்குவதற்கு நான் 50 மில்லியன் ரூபாய் செலவிட்டேன். ஏனென்றால், எனக்கு நாய்கள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. தனித்துவமான நாய்களைச் சொந்தமாக வைத்து அவற்றை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அமெரிக்காவில் பிறந்த கேடபாம்ம்ப் ஒகாமிக்கு எட்டு மாதங்களே ஆகிறது. ஏற்கெனவே 5 கிலோ கிராமுக்கு மேல் எடை உள்ளது. இது ஒவ்வொரு நாளும் 3 கிலோ பச்சை இறைச்சியை சாப்பிடுகிறது. அமெரிக்க கென்னல் கிளப்பின் கூற்றுப்படி, ஒகாமி ஒரு பகுதி ஷெப்பர்ட் மற்றும் இதயத்தில், இது ஒரு பாதுகாவலர் இனமாகும். அதன் பாதுகாப்பு உள்ளுணர்வு மற்றும் புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்றது. அதை ஒருபோதும் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த நாய்கள் அரிதானவை என்பதால் நான் அவற்றை வாங்குவதற்கு பணம் செலவிட்டேன். ஒரு திரைப்படத் திரையிடலில் ஒரு நடிகரைவிட நானும் என் நாயும் அதிக கவனத்தைப் பெறுகிறோம். நாங்கள் இருவரும் கூட்டத்தை ஈர்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

ஓர் அரிய வகை சௌசௌ நாயையும் சதீஷ் வைத்திருக்கிறார், அதை அவர் கடந்த ஆண்டு சுமார் டாலர் 3.25 மில்லியனுக்கு வாங்கினார். இந்த நாய்கள் அனைத்தும் நன்கு பராமரிக்கப்படுகின்றன. அவை ஏழு ஏக்கர் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. அங்கு ஒவ்வொன்றுக்கும் 20 அடிக்கு 20 அடி அறை கொண்ட கொட்டில் உள்ளது. அவற்றைப் பராமரிக்க ஆறு பேர் உள்ளனர்.

bengaluru man buys worlds most expensive wolfdog for rs 50 crore
சீனா| கர்ப்பிணிப் பெண்ணைப் பயமுறுத்திய நாய்.. கலைந்த கரு.. இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
Read Entire Article