ARTICLE AD BOX
வாகன சோதனைக்கு இடையே போக்குவரத்து போலீஸார் ஆவணங்கள் கேட்கும்போது கொடுக்காமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. நேற்றைய சம்பவத்தில் அதிகாரியை பணி செய்யவும் விடாமல் தடுத்ததற்காக ரூ.2,000 கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை ராமாபுரம் சிக்னலில், ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு ரூ 3,000 அபராதம் விதித்தது தொடர்பாக வைரலான வீடியோ குறித்து போக்குவரத்து காவல்துறை உயரதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.