ராமேஸ்வரம் கோயில் தரிசன வரிசையில் நின்ற வடமாநில பக்தர் சாவு

6 hours ago
ARTICLE AD BOX

ராமேஸ்வரம்:. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதை தரிசனம் செய்ய ராஜஸ்தான் மாநிலம், சிகார் பகுதியை சேர்ந்த ராஜ்தாஸ் (59) என்பவர் ரூ.50 கட்டணம் செலுத்தி வரிசையில் நின்றுள்ளார்.

அம்பாள் நுழைவு மண்டபம் பகுதியில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். அவரை கோயில் ஊழியர்கள் மீட்டு, கோயிலில் உள்ள முதலுதவி மையத்தில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ராஜ்தாஸ் உயிரிழந்தது தெரிய வந்தது. தனிப்பிரிவு போலீசார் விசாரணை செய்ததில், தனியாக வந்த ராஜ்தாஸ் திருச்செந்தூரில் நேற்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரம் வந்தது தெரிய வந்தது.

 

The post ராமேஸ்வரம் கோயில் தரிசன வரிசையில் நின்ற வடமாநில பக்தர் சாவு appeared first on Dinakaran.

Read Entire Article